புத்தாண்டில் இளைஞருடன் மெரினா சென்று ஹோட்டலில் தங்கிய 14 வயது சிறுமி - கம்பி எண்ணும் கராத்தே மாஸ்டர்

x

சென்னை திருமங்கலத்தில், கராத்தே சொல்லித் தருவதாகக் கூறி, 14 வயது சிறுமிக்கு, கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில், 14 வயது சிறுமி காணவில்லை என கடந்த ஒன்றாம் தேதி பெற்றோர் புகார் அளித்தனர். பெற்றோருடன் சேர்ந்து புகார் அளிக்க சிறுமியின் கராத்தே மாஸ்டரான உதய கருணாநிதியும் வந்திருக்கிறார். இதனிடையே, காணாமல் போன ஒரு சில மணி நேரத்திற்குப் பின் சிறுமி வீடு திரும்ப, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், புத்தாண்டை கொண்டாட மெரினா கடற்கரைக்கு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்த தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாகவும் தெரிவித்தார். மேலும், கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதி, பயிற்சிக்கு செல்லும்போது, பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து தப்பிக்கவே, கோபி என்ற இளைஞருடன் பழகியதாக சிறுமி தெரிவித்ததை அடுத்து, உதய கருணாநிதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்