சினிமா ஸ்டைலில் டோல்கேட் தடுப்பை உடைத்து சென்ற லாரி திருடன் - சேஸிங்கில் பிடித்து ஆப்படித்த போலீஸ்

x

கண்ணிமைக்கும் நேரத்தில் சினிமா பாணியில் லாரியை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலையில் பார்சல் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர், லாரியை நிறுத்தி விட்டு சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியை திருடிச் சென்றுள்ளார்.

லாரியை திருடிய நபர் சுங்கச் சாவடியையும் பொருட்படுத்தாமல் தடுப்பினை உடைத்துச் சென்ற நிலையில், லாரி ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் போலீசார் லாரியை மடக்கில் பிடித்தனர். மேலும், லாரியை திருடிச் சென்ற நபரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்