"பணத்த கொடுத்துட்டு பிரைட் ரைஸ் எடுத்துட்டு போ.."..கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்கள் - பயங்கர சிசிடிவி காட்சிகள்

x

தாம்பரம் அருகே, ஓசியில் பிரைட் ரைஸ் கேட்டு, உணவகத்தை சூறையாடிய 5 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். சேலையூர் அடுத்த, மாடம்பாக்கம் - அண்ணாநகர் மெயின் ரோட்டில், ஜெயமணி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த இரு இளைஞர்கள், 5 சிக்கன் பிரைட் ரைஸ் பார்சல் காட்டும்படி, கூறியுள்ளனர். மது போதையில் இருந்த அவர்களிடம், பணத்தை கொடுத்துவிட்டு பார்சலை எடுத்துச் செல்லும்படி, உணவக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், நண்பர்களை அழைத்து வந்து தகராறில் ஈடுபட்டு, உணவகத்தை சூறையாடியதோடு, கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில், உணவக உரிமையாளர் ஜெயமணி, அவரது மகன், கடை ஊழியர் என 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்