தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

x

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று முதல் வரும் 22ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலிலும், வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரம், உள் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வரும் 23ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று அந்தமான் கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல், இலங்கை கடலோரம், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும்,

20 முதல் 22ம் தேதி வரை, குமரிக்கடல், தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலிலும்,

வரும் 22ம் தேதி மன்னார் வளைகுடாவை ஒட்டிய இலங்கை கடலோரத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்