"பெண்ணிடம் செயின் பறிப்பு.." - பைக்கில் பறந்த இருவர்... பாலத்தில் மோதி துடிதுடித்து பலி

x

பொள்ளாச்சியில் பெண்ணிடம் செயினை பறிக்க முயற்சித்து, பைக்கில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள், பாலத்தின் மீது மோதி சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்...

பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில், நேற்றிரவு அதிவேகமாக வந்த

இரு சக்கர வாகனம், சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் பொள்ளாச்சியில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் என தெரிய வந்தது. மேலும், இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவித்த போலீசார், அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்