PFI-க்கு தடை விதித்த மத்திய அரசு - காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

x

PFI-க்கு தடை விதித்த மத்திய அரசு - காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

அனைத்து விதமான வகுப்பு வாதத்திற்கு எதிராக தொடர்ந்து போரிடுவோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து கூறியுள்ளார்.

பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடை குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள அவர், காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மை பெரும்பான்மை என்கிற எந்தவிதமான வேறுபாடும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்த மதங்களை துஷ்பிரயோகம் செய்யும் அனைத்து விதமான அமைப்புகளை எதிர்த்து போராடுவதையே காங்கிரஸ் கொள்கையாக கொண்டிருப்பதாக ஜெய்ராம்ரமேஷ் கூறியுள்ளார்.

மதச்சார்பின்மை, தேசியத்துவம் போன்றவற்றை பாதுகாக்கவும் கொண்டாடவும் அதிக முன்னுரிமை அளிப்பதாக குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சி அனைத்து விதமான வகுப்பு வாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்