மின்னல் தாக்கி செல்போன் டவரில் தீ விபத்து - மழை பெய்த‌தால் தானாக அணைந்த தீ

x

மின்னல் தாக்கி செல்போன் டவரில் தீ விபத்து - மழை பெய்த‌தால் தானாக அணைந்த தீ

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கன மழையின்போது மின்னல் தாக்கி செல்போன் டவர் தீப்பிடித்து எரிந்த‌து. காரைக்குடியில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்த‌து. இந்நிலையில், தந்தை பெரியார் நான்காவது வீதியில், தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் மீது மின்னல் தாக்கியது. இதனால், டவரில் இருந்த மின்சார பாக்ஸ் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், மழையிலேயே தீ தானாக அணைந்தது. கொட்டும் மழையில் மின்னல் தாக்கி டவர் எரிந்த‌தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்