'Cool Drinks' குடித்துக்கொண்டே கூலாக... பேக்கரியில் திருடிய மர்ம நபர்

x

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், பேக்கரியில் குளிர்பானம் அருந்தியபடி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. போலீசார் சோதனைச் சாவடி அருகே, பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது. இது குறித்து உரிமையாளர் மோகன் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத ஒருவர், கடையில் இருந்த குளிர்பானத்தை குடித்து கொண்டு, திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்