"மயங்கி விழுகுற மாறி நடிமா.. நடி.." - தாய், மகள் போட்ட நாடகம்.. அம்பலப்படுத்திய '3ஆம் கண்'

x

திக்குறிச்சியில் உள்ள 26 சென்ட் நிலம் தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த சீமா, மருதங்கோடு பகுதியை சேர்ந்த நடராஜன் ஆகியோருக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, சர்ச்சைக்குரிய நிலத்தில் சீமா, அவரது மகளை நடராஜன் தரப்பினர் பூட்டி வைத்து, தாக்குதல் நடத்தியதால், சீமா மயங்கி விழுந்ததாக வீடியோ வெளியானது. இதனிடையே, சீமா, அவரது மகளை தாக்கியதாக வெளியான தகவல் நாடகம் என, சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். அதில், சீமா, அவரது மகள் இருவரும் நிலத்துக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தானே மயங்கி கீழே விழும் காட்சி பதிவாகியுள்ளது. தன்னை பழிவாங்கும் நோக்கில், அவரை பூட்டி வைத்து தாக்கியதாக பொய் புகார் அளித்ததாக, நடராஜன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்