இரவல் கேட்டு தராததால் ஆத்திரம்:வண்டியை தீ வைத்து கொளுத்திய இளைஞர்-இளைஞரை காட்டிக் கொடுத்த சிசிடிவி

x

ஜெயங்கொண்டம் அருகே சிதம்பரம் சாலையில் வசித்து வருபவர் பக்ருதீன் . இவர் சில குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறை சென்று வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பக்ருதீன் ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத் தெருவை சேர்ந்த உவைஸ் அகமதுவிடம் அவருடைய கேடிஎம் வாகனத்தை இரவல் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, உவைஸ் அகமது தர மறுத்ததால் பக்ருதீன் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, இரவு நேரத்தில் தன் நண்பர் ஒருவருடன் வந்த பகுருதீன், உவைஸ் அகமதுவின் கேடிஎம் வாகனத்தையும், அருகில் இருந்த நண்பரின் பல்சர் வாகனத்தையும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பக்ருதீனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்