சிபிஐ விசாரணை - அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு

x

தமிழகத்தில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன் அனுமதி நடைமுறையை திரும்பப் பெற்றதற்கான தகவல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இனி மாநில அரசின் அனுமதிக்குப் பிறகே, மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடியும் என்ற அறிவிப்பை கடந்த புதன்கிழமை தமிழக அரசு வெளியிட்ட‌து. தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், இனி சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, அரசிடம் முன் அனுமதியை பெற வேண்டும். அதன்பிறகே, விசாரணையை சிபிஐ மேற்கொள்ள முடியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்