'நான் ஓடீட்டேன்ல' பூனையுடன் சிறுத்தை கிணற்றில் சிக்கியது எப்படி..?

x

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், கிணற்றில் விழுந்த பூனையும், சிறுத்தையும் பத்திரமாக மீட்கப்பட்டன. சின்னார் அருகே ஆசாபூர் கிராமத்தில், பூனையை சிறுத்தைப்புலி துரத்திச் சென்றுள்ளது. அப்போது, பூனையும், சிறுத்தையும் அங்குள்ள கிணற்றில் விழுந்து, வெளியேற முடியாமல் கத்திக்கொண்டு இருந்த‌து. சத்தம் கேட்டு பார்த்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர், சிறுத்தையையும், பூனையையும் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்