பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை - சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கு ரத்து

x

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. 3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சிவசங்கர் பாபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை ஏற்றுக் கொள்ளக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாலியல் தொல்லை என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குவதாகவும் இதற்கு சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் காரணம் என கூறிய உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்