வரிசையாக நிறுத்தப்பட்ட கார்கள்..இடிந்து விழுந்த சுற்றுசுவர் - கனமழையால் நடந்த பரபரப்பு

x

பெங்களூருவில் கனமழையால், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. நேற்றிரவு இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் கரைப்புரண்டு ஓடிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மெஜஸ்டிக் பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும், இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்