நள்ளிரவில் தொழிலதிபர் வீட்டில் காருக்கு தீ வைப்பு - வெளியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்

x

தூத்துக்குடியில், தொழிலதிபர் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காருக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

கயத்தாறு-கடம்பூர் சாலையில், நாகலாபுரத்தை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். தொழில் போட்டி காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்