மைல் கல்லில் மோதி ஆற்றில் கவிழ்ந்த கார் - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நால்வர் | Car Accident

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சரபங்கா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. காடையாம்பட்டியை அடுத்த டேனிஷ்பேட்டை நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட கார் வந்து கொண்டிருந்த போது, மைல் கல்லில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த‌ கார், சரபங்கா ஆற்றில் கவிழ்ந்து விழுந்த‌து. நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்த 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்