சாலையில் ஒருவர் செய்த தவறு 4 பெண்களின் உயிரை பறித்தது - நெஞ்சை உறைய வைக்கும் கோரம்

x

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தங்கசாமி தனது குடும்பத்தினருடன் திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மணப்பாறை அருகே சென்றுகொண்டிருந்தபோது, கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு கார்களின் மீது, பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தங்கசாமியின் மனைவி மங்கையர்க்கரசி, உறவினர்கள் ரஞ்சனா, பூஜா, மற்றொரு காரில் வந்த பத்மா ஆகிய நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்