திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்... அடுத்த நொடியே 30 அடி ஆழ கிணற்றுக்குள்... - கரூர் அருகே பயங்கரம்

x

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்ததில், தாய், மகள் காயமடைந்தனர். ‌கோவை நேரு நகரைச் சேர்ந்த ஹேமலதா என்பவர், தனது மகள் திவ்யதர்ஷினியுடன் திருச்சிக்கு காரில் சென்றார். கரூர் மாவட்டம் நொய்யல் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், 30 அடி அழம் கொண்ட கிணற்றுக்குள் விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ஹேமலதா, அவரது மகள் திவ்யதர்ஷினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்