போலீசார் முன் துப்பாக்கியை தூக்கலாமா?... அடுத்த நொடியே அதிரடி ஆரம்பம் - சினிமாவை மிஞ்சிய 'ஆக்சன்'

x

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தின்னூர் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருண் என்ற கெஞ்சா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரங்கநாத் என்ற போலீசார் மீது அருணும் அவரின் நண்பர்களும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் அவர்கள் மீது அருண் துப்பாக்கியால் சுட்டள்ளார். இதையடுத்து அருணை போலீசார் வலது காலில் சுட்டு அவரை பிடித்தனர். இதேபோல் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அஜய் என்பவரையும் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களால் காயமடைந்த போலீசார் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்