தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா வருமா ? - சீரம் நிறுவன சிஇஓ போட்ட ட்வீட்

x

கொரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா தமது டிவிட்டர் பக்கத்தில், சிறப்பான முறையில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், மத்திய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்