மறக்க முடியுமா? பாடி மறைந்த பாடும் நிலா...! எஸ்.பி.பி. நினைவு தினம்...

x

திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

எஸ் பி பி பாலசுப்ரமணியத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

அதில் அவருடைய மனைவி சாவித்திரி ,மகள் பல்லவி, மற்றும் பேரன் பேத்திகள் மலர் தூவி கண்ணீர் மல்க நினைவஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் தீனாவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார், இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை கச்சேரியில் எஸ்பிபி பாடிய பாடல்கள் பாடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்