"இப்படியும் லோன் வாங்கலாமா..?.. வங்கியை அலற விட்ட மூவர் - மேனஜர் தலையில் விழுந்த இடி

x

சென்னை, பெருங்குளத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர், கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ராஜேஸ்வரி என்பவரிடம் இருந்து புதிய அடுக்குமாடி குடியிருப்பு வாங்க போவதாக கூறி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் வங்கியில் 16 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். கடனை திருப்பி செலுத்ததால் வங்கி ஊழியர்கள் விசாரணை நடத்திய போது, கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ராஜேஸ்வரி சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை முறையான அனுமதியின்றி கட்டியதும், போலி ஆவணங்கள் மூலமாக கடன் பெற்றதும் தெரியவந்தது. இது குறித்து வங்கியின் பொதுமேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேஸ்வரி, அவரது கணவர் ஜெகநாதர் மற்றும் முத்துலட்சுமி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்