பிரபல துணிக்கடை TRIAL ரூமில் கேமரா.. ஏசி-யில் உருண்ட கண்கள்..அண்ணனுக்காக தங்கை செய்த பகீர் காரியம்

x

கள்ளக்குறிச்சி அருகே பிரபல ஜவுளிக்கடையின் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் கேமிரா வைத்த விவகாரத்தில், அண்ணன், தங்கை இருவரையும் போலிசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பெண் வாடிக்கையாளர் ஒருவர், உடை மாற்றும் அறையை பயன்படுத்தியுள்ளார். அப்போது, அறையின் ஏசி பாயிண்டில் செல்போன் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கடை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அறையினுள் வந்து சோதனையிட்ட பெண் ஊழியர்கள் ஏசி பாயிண்ட்டில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்த போது, பெண் ஊழியர் ஒருவர் செல்போனை பிடுங்கி அதிலிருந்து மெமரிகார்டை மட்டும் எடுத்து தப்பியோடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பெண் வாடிக்கையாளரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு தான் அதே அறையை பயன்படுத்தியதாகவும், அதனால் தன்னுடைய புகைப்படத்தை அழிக்கவே மெமரிக்கார்டை எடுத்து தப்பியோடியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது, கைப்பற்றப்பட்ட செல்போனை கடையில் பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்ற ஊழியர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. உடனே, விக்னேஷை பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இதற்கு அதே கடையில் பணிபுரிந்து வந்த அவரது தங்கை உதயா என்பவரும் உடந்தை என்பது தெரியவர இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்