"தமிழக முதலீட்டாளர் மாநாட்டிற்க்கு வாங்க" - ஜப்பான் தொழிலதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

x

தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க, முதலீட்டாளர்களை சிகப்புக் கம்பளம் விரித்து தமிழகம் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

தனக்கு ஜப்பான் புதிதல்ல என்றும், தங்களுக்கு தானும் புதியவர் அல்ல என்றும் கூறினார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஜப்பான் உதவி செய்ததாகக் கூறிய முதலமைச்சர், வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருவதாகவும், தமிழகத்தில் அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்