தடுப்புச் சுவர் மோதி பஸ் விபத்து..நசுங்கிய முன்பக்கம்..சென்னையில் பரபரப்பு

x

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகரப் பேருந்து, கிண்டி மடுவங்கரை மேம்பாலத்தில் இருந்து ஆலந்தூர் காந்தி மார்க்கெட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில், பேருந்தின் முன்பக்கம் மோதியது. ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. விபத்தில் பேருந்தில் இருந்த பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். பேருந்தில் வந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்