சென்னையில் இடிந்து விழுந்த கட்டடம்... 2 பேர் பலி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

x

சென்னையில் இடிந்து விழுந்த கட்டடம்... 2 பேர் பலி - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னையில் கனமழையால் நூறாண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பார்ட் டவுன் தங்கசாலை பகுதியில் ராஜேந்திர தாஸ் என்பவருக்கு சொந்தமான நூறாண்டு பழமையான கட்டடம், தொடர் மழையால் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் சிக்கி கங்குதேவி எனும் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார்பெண்டர் சங்கர் என்பவர் பலத்த காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் தவிர கட்டிடத்தில் சிக்கிய சரவணன், சிவக்குமார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டடம் இடிந்து விழுந்த இடத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்