நண்பன் காதலியை அபகரித்து அவரை எரித்தும் கொன்ற கொடூர முதியவர் - உளுந்தூர்பேட்டையில் அதிர்ச்சி

x

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கு திருமணமாகி, 2 ஆண் பிள்ளைகள் உள்ளன. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து விருத்தாச்சலம் வந்த கவிதா, அங்கு பொறிக்கடை வியாபாரியான ஆறுமுகத்திடம், நெருக்கமாக பழகியுள்ளார்ன பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஆறுமுகம் மற்றும் அவரது நண்பரான வைத்தி இருவரும் சேர்ந்து, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கவிதாவிற்கும், வைத்திற்கும் நெருக்கமான உறவு ஏற்பட, இதனை அறிந்த ஆறுமுகம் இருவரையும் கண்டித்துள்ளார். ஆறுமுகத்தை விட்டு பிரிந்த கவிதா, வைத்தியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கவிதாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, வைத்தி வீட்டிற்கு வந்த ஆறுமுகத்திடம், இருவரும் தகராறு செய்துள்ளனர். அப்போது, ஆறுமுகத்தின் மீது பெட்ரோல் ஊற்றி இருவரும் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கவிதா மற்றும் வைத்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்