சிறுமியை கர்ப்பமாகி கொன்று புதைத்த கொடூர காதலன் - விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

விக்கிரவாண்டி அருகே கர்ப்பமான சிறுமியை கொலை செய்து புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது, வாய்க்காலில் பள்ளம் தோண்டிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்த நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் என்பது தெரியவந்தது. மேலும் அகிலன் என்பவர் சிறுமியை காதலித்து வந்தது தெரியவரவே, சென்னையில் இருந்த அகிலனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்திய நிலையில், வாக்குவாதம் முற்றி சிறுமியை கொன்று புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அகிலனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்