கள்ளக்குறிச்சி பள்ளிக்கு சென்ற செய்தியாளர்கள் மீது கொடூர தாக்குதல் - காரை வழிமறித்து தாக்கிய காட்சிகள்

x

கனியாமூர் தனியார் பள்ளி சீரமைப்பு பணி குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளரை தாக்கிய அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை மறுசீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்கு காரில் சென்ற செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞரை வழிமறித்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் காயமடைந்த இருவரும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் ராஜசேகரன் உட்பட 5 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்