சித்தப்பாவை துடிதுடிக்க கொன்று டிராக்டரை வைத்து செட்டப் செய்த அண்ணன் மகன்.. 4 மாதங்களுக்கு பின் விலகிய மர்மம்

x

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே, சித்தப்பாவை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

படகுப்பம் பகுதியைச் சேர்ந்த 65 வயதான உதயகுமார், கடந்த டிசம்பர் மாதம், டிராக்டர் கவிழ்ந்த நிலையில், பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் அவர் இறந்த கூறப்பட்டது. எனினும், சந்தேகம் மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில், உதயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதயகுமாரின் அண்ணன் சிவக்குமாரின் மகன் மணிகண்டன் அவரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. உதயகுமாருக்கும், சிவக்குமாருக்கும், நிலத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மணிகண்டன் உதயகுமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, டிராக்டரை கவிழ்த்து, அந்த விபத்தில் அவர் உயிரிழந்தது போன்று செட்டப் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்