சகோதரர் முறை.. தகாத உறவு - தட்டிக் கேட்ட கணவனுக்கு மனைவி நிகழ்த்திய பயங்கரம் -அதிர வைக்கும் சம்பவம்

x

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள சிங்கனேந்தல் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி சாந்திக்கும் சகோதரர் உறவு முறை கொண்ட இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பிச்சைக்கனி சொந்த ஊருக்கு வந்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி சாந்தி, தன் கள்ளக்காதலர்களை வைத்து கணவரையே கொடூரமாக கொலை செய்தார். கடந்த மே மாதம் நடந்த இந்த சம்பவத்தில் கலை மோகன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான பார்த்திபன் மற்றும் சாந்தி ஆகியோர் தலைமறைவானது தெரியவந்தது. இதில் சாந்தி அந்தமான் தப்பிச் செல்ல முயன்றது உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்