லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை மூச்சை அடக்கிக் கொடூரமாக கொன்ற காதலன்.. FAN-ல் தொங்க விட முயற்சி..திகில் சம்பவம்

x

பெங்களூருவில், லிவ்-இன் உறவில் இருந்த இளம்பெண்ணை, தலையணையால் முகத்தை அழுத்திக் கொன்ற கொடூர காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூருவின் ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஹைதராபாத்தைச் சேர்ந்த அகன்ஷா என்ற இளம்பெண் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு, இவரது தோழி சென்றபோது, மர்மமான முறையில் அகன்ஷா இறந்து கிடந்ததை பார்த்து போலீ​சாருக்கு தகவல் அளித்தார்.

இது தொடர்பான விசாரணையில், டெல்லியை சேர்ந்த அர்பித் என்ற இளைஞருடன், அகன்ஷா லிவ் இன் உறவில் இருந்தது தெரியவந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில், அகன்ஷாவை, அர்பித், தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்த விட்டு, கொலையை மறைக்க, தற்கொலை செய்தது போல மின்விசிறியால் உடலை தொங்க விட்டுச் செல்ல முயன்றதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவான அர்பித்தை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்