பள்ளம் தோண்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட சடலம் - போலீசார் விசாரணை

x

விழுப்புரம் மாவட்டம் சாலவனூரில் சுடுகாட்டு பகுதியிலுள்ள ஏரி வாய்க்காலில், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது கை ஒன்று தெரியவே அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசாரின் மேற்பார்வையில் பள்ளம் தோண்டப்பட்டபோது, 25 வயது மதிக்க தக்க இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பெண் சடலம் யாருடையது என விசாரணையில் இறங்கியுள்ளனர். சாலவனூர் பகுதியில் இளம்பெண் மாயமானதாக புகார் வரவில்லை என்பதால், மர்ம நபர்கள் இளம் பெண்ணை கொலை செய்து அப்பகுதியில் புதைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்