ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
x

திருச்சி விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளர் எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிட வேண்டும். எங்கள் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க தான் என்றார்.

பொது வேட்பாளரை நிறுத்த வேண்டியதில்லை. அ.தி.மு.க வில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். ஈரோட்டில் நின்று வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறினார்.

தற்போதைய சூழலில் எந்தவித குழப்பமும் இல்லை என கூறிய அண்ணாமலை, தங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க என்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பலர் அதிமுகவில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.


கூட்டணி சார்பில் நிற்க கூடிய வேட்பாளருக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்கள் கடமை என்றும் அண்ணாமலை கூறினார்.

இடைத்தேர்தலில் பணம் அதிகம் செலவு செய்வார்கள் என குறிப்பிட்ட அண்ணாமலை, பண பலம், படை பலம், அதிகார பலத்தை எதிர்த்து நிற்க கூடிய வேட்பாளர் நிற்க வேண்டும் என்றார்.

கூட்டணிக்கு மரபு, தர்மம் உள்ளது என்றும் இடைதேர்தல்கள் கட்சியின் பலத்தை தீர்மானிப்பதற்கானது அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னால் அவர் கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா என்பது சந்தேகம் தான் என அண்ணாமலை விமர்சித்தார்.



Next Story

மேலும் செய்திகள்