பைக் திருடர்களை அலறவிட்ட புது டெக்னிக்...எடுத்து சென்ற வேகத்தில் பிடித்து தந்த போலீஸ் | Theft

x

திருப்பூரில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர், ஜிபிஎஸ் கருவி மூலம் மதுரையில் கைது செய்யப்பட்டார். திருப்பூரில், சாலையில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருடு போனதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜிபிஎஸ் கருவி மூலம் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்த கீரைத்துரை போலீசார், மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த கபிலன் என்பவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தில் இருந்த ஆறு பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்