பைக் ரேஸில் ஏற்பட்ட பிரச்சினை... இருதரப்பு சிறார்கள் இடையே மோதல் - தடுக்க சென்றவருக்கு அரிவாள் வெட்டு

x
  • நெல்லை மாவட்டம் அம்பையில் சிறார்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்ற இளைஞருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
  • அம்பையில் இருந்து கோவில்குளம் நோக்கி 5 சிறுவர்கள் பைக் ரேஸ் சென்றுள்ளார்.
  • அப்போது, பிரச்சினை ஏற்பட 3 சிறுவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
  • இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞர் தடுக்க சென்றுள்ளார்.
  • ஆனால், சிறார்கள் ராஜாவை அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்