"கடனை கேட்டா பைக்கை கொளுத்துவோம்".. வாகனத்திற்கு தீ வைத்து கத்திய பெண்கள் - எரிந்த பைக்கை வேடிக்கை பார்த்த உரிமையாளர்

x

கர்நாடகாவில், கடன் வசூலிக்க வந்த வங்கி ஊழியரின் வாகனம் என்றெண்ணி மற்றொருவரின் வாகனத்தை மகளிர் குழுக்கள் தீ வைத்து எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோலார் மாவட்டத்திற்கு உட்பட்ட பீசனஹல்லி கிராமத்தில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கூட்டுறவு வங்கியில் ஸ்ரீ சக்தி சங்கத்தினர் வாங்கிய கடனை வசூலிப்பதற்காக ஜோசப் என்ற வங்கி ஊழியர் வந்துள்ளார். காங்கிரஸ் அரசு கடனை தள்ளுபடி செய்ய உள்ளதாக கூறி வங்கி ஊழியர்களுடன் பெண்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பெண்கள், வங்கி ஊழியரின் வாகனம் என நினைத்து மற்றொருவரின் இரு சக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தனர். தீப்பிடித்து எரிவது தனது பைக் என தெரியாமல் அதன் உரிமையாளர் வேடிக்கை பார்த்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்