நடு ரோட்டில் வெட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவி - இளைஞர்களுக்கு போலீசார் வலை

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடு ரோட்டில் வெட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவி - இளைஞர்களுக்கு போலீசார் வலை
x

பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.





பெங்களூரை சேர்ந்தவர் 20 வயதான இளம் பெண் ராஷி. கல்லூரி மாணவியான இவர், மாலையில் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார் அப்போது, சாலையில் எதிரே வந்த 2 இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ராஷியை நடு ரோட்டில் அரிவாளால் வெட்டி வீசிவிட்டு அங்கிருந்து சென்றனர், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்