"மருத்துவராக இருப்பது சுலபமான காரியம் அல்ல.." - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

x

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான மாநாடு, சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்து கண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மருத்துவராக இருப்பது சுலபமான காரியம் அல்ல என்றும், தங்கள் இன்பங்களை தியாகம் செய்துவிட்டு நோயாளிகளை பார்க்க வேண்டும் என்றும் கூறினார். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஊக்கம் அளித்திருப்பதாக கூறிய அவர், ஏழைகளும் எளிதில் டயாலிசிஸ் செய்து கொள்ளும் வகையில் குஜராத் மாடலை புதுச்சேரியில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்