பைக்கில் சென்ற கணவன் மனைவியை கடித்துக் குதறிய கரடிகள்

x

கருமந்துறை வனப்பகுதியில் கணவன் மனைவியை கரடிகள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமக்கண்ணு-தீர்த்தியம்மாள் தம்பதி. இவர்கள் இருவரும், இருசக்கர வாகனத்தில் தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, வனப்பகுதியில் இருந்து திடீரென வந்த 2 கரடிகள், இருவரையும் கடித்துக் குதறின.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்