போலீசார் பூட்டிய பாரை திறந்து மீண்டும் வியாபாரம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரை, போலீசார் பூட்டி சீல் வைத்த நிலையில், பாரை திறந்து விற்பனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஞ்சோலை பகுதியில் நள்ளிரவில் மது விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சோதனை மேற்கொண்ட சின்னாளப்பட்டி சார்பு ஆய்வாளர் கோமதி மதுபான கூட்டத்தை பூட்டி சீல் வைத்தார். இந்நிலையில், பகல் நேரத்தில் பார் ஊழியர்கள் பூட்டை திறந்து வழக்கம் போல செயல்பட தொடங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாரை மீண்டும் பூட்டி, எச்சரிக்கை விடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்