இந்திய பாஸ்போர்ட்டில் 'வளைகுடா' தப்பும் வங்கதேசத்தவர்கள் - சிக்கிய 4 பேர் -வெளியான 'திடுக்' பின்னணி

x

வளைகுடா நாடுகளில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை என்பதால், இந்திய பாஸ்போர்ட்டை வைத்து வெளிநாடு செல்ல முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர், கொச்சி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சமீர் ராய், ராய் அரு, ராய் அனிகட், நிமைதாஸ் ஆகிய 4 பேர், போலி பாஸ்போர்ட் மூலம் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்ல இருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வளைகுடா நாடுகள் வேலைக்கு அமர்த்துவதில்லை என்பதால், இந்திய குடிமக்கள் என போலியாக பாஸ்போர்ட் தயார் செய்ததாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்