பவானி கூடுதுறையில் புனித நீராட தடை

x

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவிரி ஆற்றின் கரையோர பகுதி மக்கள், ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்