ஜாமீன் சகோதரர்களின் அடுத்த Sketch - உஷாரான போலீஸ்! | Sriperumbudur | 3 Brothers |

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே குற்ற சம்பவங்களில் ஈடுபட திட்டம் தீட்டிய, அண்ணன் தம்பி உட்பட 3 கொலை குற்றவாளிகள் கைது. செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மேவளூர்குப்பத்தை சேர்ந்த சகோதரர்களான ரஞ்சித் குமார், அஜித்குமார் ஆகியோரும், ஜெயக்குமார் என்பவரும் கொலை வழக்கில் ஜாமினில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மூவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மூவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்