உயிரை பறிக்கும் பாக்டீரியா தொற்று! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

x

அமெரிக்காவில் தசை உண்ணும் பாக்டீரியாவில் 11வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவை சேர்ந்த ஜெஸ்ஸி புரௌன் என்ற சிறுவனுக்கு, கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் சிறுவனின் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. காயம் அதிகரித்ததால், பரிசோதனையில் சிறுவனுக்கு தசை உண்ணும் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதியானது. படிப்படியாக ரத்த ஓட்டம் நிறுத்தம், உடலுறுப்பு செயலிழப்பு என பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். தசை உண்ணும் பாக்டீரியாவால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்