வனவிலங்கு-மனித மோதல்களைத் தடுக்க... பொம்மலாட்டம், தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு

x

வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பொம்மலாட்டம், தெருக்கூத்துடன், விலங்குகளைப் போல் மாறுவேடமணிந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. நீலகிரி சுற்றுப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் - மனிதர்கள் மோதல்களைத் தடுக்கும் விதமாக விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 10க்கும் மேற்பட்ட இடங்களில், குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்தி மொழியில் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் விலங்குகள் போல் மாறுவேடம் அணிந்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அத்துடன் பொம்மலாட்டம், தெருக்கூத்து மூலமும் அறிவுரை வழங்கப்பட்டது. இதை வடமாநிலத்தவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்