ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே போட்டி - மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

x

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டவுன்ஸ்வில் நகரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி, 47.3 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா, 33.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி, 9 பந்துகளில் தலா 3 சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார். முன்னதாக சமீபத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்சுக்கு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், இருநாட்டு வீரர்களும் மவுன அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்