ரிசல்ட் பார்த்த 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.. ஒரு முக்கிய அறிவிப்பு

x

இன்று காலை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள் வெளியான உடன் தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர, மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 5 கல்லூரிகள் வரை விண்ணப்பம் செய்வதற்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் 2 ரூபாய் செலுத்தினால் போதுமானது எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் விண்ணப்பிக்க வரும் 19-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்