செயலியில் ஆசிரியர்களின் வருகை பதிவு...அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை

x

பயோமெட்ரிக் முறையை மீண்டும் கொண்டு வர கோரிக்கை

  • அரசுப் பள்ளிகளில் ஆசியர்களின் வருகையை, பழையபடி, பயோமெட்ரிக் முறையிலேயே பதிவு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை, கல்வித்துறை செயலி மூலம் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும், மாணவர்களின் வருகைப்பதிவை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  • நகரப்பகுதிகளில் இந்த முறைக்கு பிரச்சினை இல்லை என்றும், ஆனால், சர்வர் மற்றும் சிக்னல் பிரச்சினைகள் உள்ள கிராமப்புறங்களில் இந்த முறையை செயல்படுத்துவது சிரமம் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
  • மேலும், தொழில்நுட்பம் பழகாத ஆசிரியர்கள் இந்த முறையால் சிரமங்களுக்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர். எனவே, கொரோனா காரணமாக கைவிடப்பட்ட பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்