நள்ளிரவில் Rapido ஆட்டோவில் பயணித்த...இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்

x

ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண் கோவையில் கடந்த சில மாதங்களாக தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை திருப்பூர் சென்ற அந்த இளம்பெண், இரவில் கோவை திரும்பி உள்ளார். அப்போது நள்ளிரவு 12.30 மணிக்கு பீளமேடு பகுதியில் இறங்கிய அவர், வீட்டிற்கு செல்ல ரேபிடோ ஆட்டோவை புக் செய்துள்ளார். தன்னுடைய வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஆட்டோவை நிறுத்துமாறு அந்த இளம் பெண் கூறியும் அவர் நிறுத்தாமல் செல்லவே, வேறு வழியின்றி இளம் பெண் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்துள்ளார். இதில் அவரின் தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரான முகமது சாதிக் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்